• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

இலங்கை

மாலைதீவிலிருந்து நாட்டிற்கு வந்து இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஹம்பாந்தோட்டை தலைமை நீதவான் பிணை வழங்கியுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ திட்டமிட்ட விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதை அடுத்து, ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக நேற்று (28) பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.

அப்போது நாமல் ராஜபக்ஷ மாலைதீவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நாடு திரும்பிய நாமல் ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 

Leave a Reply