• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பகிடிவதை சம்பவம் - தென்கிழக்கு பல்கலையில் 22 மாணவர்கள் இடைநீக்கம்

இலங்கை

தொடர்ந்து 22 மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் இருந்து தென்கிழக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் இடைநீக்கம் செய்துள்ளனர்.

இது தொடர்பில் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,

புதிய மாணவர்கள் குழு ஒன்று கொடூரமான பகிடிவதை செய்யப்படுவதைக் காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த இடைநீக்கங்கள் அமல்படுத்தப்பட்டன.

ஆரம்பகட்ட உள் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களை இடைநீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட நபர்கள் பொறியியல் பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளைச் சேர்ந்த மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு மேலதிகமாக, சம்பவம் குறித்து பொலிஸார் முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பல்கலைக்கழகங்களுக்குள் பகிடிவதை உட்பட அனைத்து வகையான வன்முறைகளையும் தடுக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவேவே ஒரு சிறப்பு பணிக்குழுவை நியமித்துள்ளார்
 

Leave a Reply