மமிதாவின் கேள்விக்கு விஜயின் ரியாக்ஷன்
சினிமா
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்குபின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடப் போவதாக கூறப்படுகிறது.
இதுக்குறித்து நடிகை மமிதா பைஜு பேசியுள்ளார் அதில் அவர் " நான் தளபதி விஜயிடம் கேட்டேன் இதுதான் உங்களுடைய கடைசி திரைப்படமா என அதற்கு அவர் `தெரியவில்லை . நாம் தேர்தலுக்கு பிறகு பார்ப்போம். படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பின் போது மொத்த செட்டும் மிகவும் எமோஷனலாக இருந்தனர். விஜய் சாரும் மிகவும் எமோஷனலாக இருந்தார்" என கூறினார்.
இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவான ஃபர்ஸ்ட் ரோர் என்ற தலைப்பில் படக்குழு வெளியிட்டது.
என் நெஞ்சில் குடியிருக்கும் என விஜயின் குரலில் தொடங்கும் வீடியோ தளபதி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. படத்தில் விஜய் தளபதி வெற்றி கொண்டான் என்ற காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.






















