• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெண் உரிமைகள் முதல் பிரதமர் நேரு வரை.. ஈரான் தலைவர் காமேனியின் மறுபக்கம் - பதிவுகள் வைரல்

கடந்த ஜூன் 13 தேதி அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது. ஈரான் அணு ஆயுதங்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் என்பதால் முன்கூட்டியே தாக்கியதாக இஸ்ரேல் சொன்னது.

ஆனால் தங்கள் அணு ஆயுதங்கள் வளர்ச்சி மற்றும் அமைதியின் நிமித்தமே என்று கூறிய ஈரான் கூறியது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் ஒன்றையொன்று ஒரு வாரத்திற்கும் மேலாக தாக்கி வருகின்றன.

இதற்க்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியில் பழைய சமூக பழைய சமூக ஊடகப் பதிவுகள் வைரலாகி வருகின்றன.

இந்தப் பதிவுகளில் காமேனி, பெண் உரிமை, கவிதைகள் மீதான விருப்பம், பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு, இந்தியப் பிரதமரின் புத்தகத்தைப் படித்தது, மற்றும் சிறுவயதில் தான் எப்படி குறும்புக்காரராக இருந்தார் என்று பலவற்றை குறித்துப் பேசியுள்ளார்.

வைரலானவற்றில் சில பதிவுகள் 10 வருடங்களுக்கும் பழையவை. தற்போது போரை முன்னெடுத்து செல்லும் காமேனியின் முற்றிலும் மாறுபட்ட பிம்பத்தை இந்த பதிவுகள் முன்வைக்கின்றன.

86 வயதான இந்த தலைவரை தீவிர இஸ்லாமிய குடியரசின் மூத்த மதகுரு மட்டுமே என்று தாங்கள் தவறாக மதிப்பிட்டுவிட்டதாகக் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

பெண்கள் தொடர்பான பல பதிவுகளில், காமேனி பெண்களுக்காக குரல் கொடுத்ததுடன், காதல் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். "ஒரு மனிதன் பெண்ணின் தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள பொறுப்புள்ளவன், அவளது உணர்ச்சிபூர்வமான நிலையை புறக்கணிக்கக் கூடாது" என்று அவர் எழுதியுள்ளார்.

இதற்கு எக்ஸ் பயனர் ஒருவர், "காதலனாகப் பிறந்தவர், உச்ச தலைவராக மாற கட்டாயப்படுத்தப்பட்டவர்" என்று தற்போது கமெண்ட் செய்துள்ளார்.

" பெண் ஒரு மென்மையான மலர், வீட்டு வேலைக்காரி அல்ல. ஒரு பெண்ணை வீட்டில் ஒரு பூவைப் போல நடத்த வேண்டும். ஒரு பூவைப் பராமரிக்க வேண்டும்" என்று கமேனி கூறினார். ஆனால் இஸ்லாமிய குடியரசான ஈரானில் பெண் உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவதே கள யதார்த்தமாக உள்ளத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டி உள்ளது.

2013 ஆம் ஆண்டு ஒரு பதிவில், காமேனி தனது பள்ளிக் காலங்களை நினைவு கூர்ந்துள்ளார். "முதல் நாளில் இருந்தே நான் பள்ளியில் ஒரு சிறப்பு மேலங்கியுடன் சென்றேன். மற்ற குழந்தைகளுக்கும் முன்பாக அதை அணிவது சங்கடமாக இருந்தது, ஆனால் குறும்புத்தனமாகவும் விளையாட்டுத்தனமாகவும் இருப்பதன் மூலம் அதை ஈடுகட்ட முயற்சித்தேன்" என்று எழுதியுள்ளார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புத்தகத்தைப் படித்து நாட்டின் வரலாற்றைப் புரிந்து கொண்டதாகவும் காமேனி கருத்து தெரிவித்துள்ளார். "நேருவின் 'உலக வரலாற்றின் காட்சிகள்' புத்தகத்தைப் படிக்கும் முன், காலனித்துவத்திற்கு முன் இந்தியா இத்தனை முக்கியமான முன்னேற்றங்களுக்கு உள்ளானது என்று எனக்குத் தெரியாது" என்று காமேனி பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாலும் ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று காமேனி சபதம் செய்துள்ள நேரத்தில் இந்தப் பதிவுகள் மீண்டும் கவனம் பெற்று வருகின்றன.

அமெரிக்கா மோதலில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்ப்படுத்துவோம் என்று என்று காமேனி சமீபத்தில் எச்சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply