• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எரிபொருள் விநியோகம் தொடர்பான முக்கிய தகவல்

இலங்கை

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளை விற்பனை செய்வது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடிவருவதாகவும், இதனால் தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகள் ஏற்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டுகிறது.

அதன்படி, மேற்கண்ட முடிவு எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் அதற்கு மாறாகச் செயல்பட்டால், கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதுமான எரிபொருள் இருப்பு இருந்தும், நுகர்வோர் தேவையற்ற அச்சத்தை உருவாக்கி இவ்வாறு செயல்படுவதாகத் தோன்றுவதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கேன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டுகிறது.
 

Leave a Reply