இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை
இலங்கை
மீண்டும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் கடந்த காலத்தை விட கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வேலனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மயிலிட்டி துறைமுகத்தை விரிவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






















