
AIDAstella கப்பல் வருகையுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் புதிய மைல்கல்
இலங்கை
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் (HIP), அதன் கப்பல் நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பதிவு செய்தது.
ஜெர்மன் கப்பல் நிறுவன AIDA இன் முதல் கப்பலான Sphinx-class AIDAstella ஹம்பாந்தோட்டையை வந்தடைந்ததன் மூலமாக துறைமுகம் இந்த மைல்கல்லை எட்டியது.
வெசாக் வார இறுதியில் துறைமுகத்திற்கு வந்த இந்த சொகுசு கப்பல், குரூஸ் லைனுக்குச் சொந்தமான ஸ்பிங்க்ஸ் வகை கப்பல்களின் வரிசையில் ஏழாவது கப்பலாகும் என்று HIP ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இத்தாலியின் ஜெனோவா கொடியின் கீழ் பயணிக்கும் AIDAstella, மலேசியாவிலிருந்து 2,000 பயணிகள் மற்றும் 620 பணியாளர்களை சுமந்து வந்துள்ளது.
253.26 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பல், AIDAவின் உலகளாவிய பயணச் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாகும்.
மேலும் தற்போது அதன் அடுத்த இலக்கான மாலைத்தீவுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான இடங்களான யால தேசிய பூங்கா, வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டை மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள பிரபலமான பறவை பூங்கா ஆகியவற்றை ஆராய்வதற்கான வாய்ப்பு கப்பலில் வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு கிடைத்தது.
அவை வனவிலங்குகள், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா ஆகியவற்றின் கலவையை வழங்குகின்றன.