TamilsGuide

பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனை விதித்த சர்வதேச நாணய நிதியம் - காரணம் இதுதான்

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் தவணையாக 110 கோடி டாலர் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டது.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு 2வது தவணையாக 8,670 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ஐ.எம்.எப். அறிவித்தது. இதற்கு நம் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கும் முடிவை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.

இந்நிலையில், அடுத்த தவணையை விடுவிக்க பாகிஸ்தானுக்கு கூடுதலாக 11 புதிய நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியானது. இவற்றையும் சேர்த்து மொத்த நிபந்தனைகள் 50 ஆக அதிகரித்துள்ளது.

இந்த 11 நிபந்தனைகளில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான நிபந்தனை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment