தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மத கஜ ராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவரது உடல்நிலை குறித்து சமீபத்தில் பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்தார். அதற்கு பின் கூட்ட நெரிசல் மற்றும் சாப்பிடாமல் இருந்ததே அதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறினர்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் விஷால் அவரது திருமணத்தை பற்றி மனம் திறந்துள்ளார். அதில் நடிகர் சங்க கட்டித்தை கட்டி முடித்த பின் என்னுடைய திருமணம் நடக்கும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு அடுத்து என்னுடைய திருமணம் நடக்கும். பெண் பார்த்தாச்சு, எல்லாம் பேசி முடிச்சாச்சு, இது ஒரு காதல் திருமணம் தான் " என தெரிவித்துள்ளார்.
இதனால் விஷால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.