TamilsGuide

வாகன புகைப் பரிசோதனை தன்சல்

‘க்ளின் ஸ்ரீலங்கா’ முயற்சியுடன் இணைந்து இரண்டு நாள் வாகன புகைப் பரிசோதனை தன்சலை நடத்தப் போவதாக இலங்கை மோட்டார் போக்குவரத்துத் துறை (DMT) அறிவித்துள்ளது.

இரண்டு நாள் வாகன புகைப் பரிசோதனை தன்சல் இன்று (மே 15) மற்றும் நாளை (மே 16) நாரஹேன்பிட்டியில் உள்ள DMT அலுவலகத்திற்கு முன்பாக காலை 09.30 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறும்.

மோட்டார் போக்குவரத்து ஆணையரின் மோட்டார் வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முயற்சி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு இலவச சேவைகளை வழங்குகிறது.
 

Leave a comment

Comment