TamilsGuide

புத்தக கண்காட்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (28) கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சிக்கு விஜயம் செய்துள்ளார்.

இலக்கிய மாதத்தை முன்னிட்டு இலங்கைப் புத்தகப் பதிப்பாளர் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் புத்தகக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறுகின்றது.

நேற்று (27) ஆரம்பமாகி ஒக்டோபர் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு கண்காட்சி 25 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

புத்தகங்களில் ஆர்வமுள்ள பெருமளவிலான மக்கள் ஒன்றுகூடும் இந்தக் கண்காட்சி கொழும்பில் நடைபெறும் மிகப்பெரிய கண்காட்சிகளில் ஒன்றாகும்.
 

Leave a comment

Comment