TamilsGuide

அபிஷேக் பச்சனுடன் விவாகரத்தா? முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்

விவாகரத்து தொடர்பான வதந்திக்கு ஐஸ்வர்யா ராய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்தியாவிலிருந்து உலக அழகிப்பட்டம் பல பேர் பெற்றிருந்தாலும் மக்கள் மனதில் சட்டென வருபவர் ஐஸ்வர்யா ராய்தான். ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் பொன்னியின் செல்வன் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கிய இவர் 2007 ம் ஆண்டு சக நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய் விவாகரத்து பெற உள்ளார்கள் என வதந்திகள் பரவி வந்தன. இதற்கு வலு சேர்க்கும் வகையில் திருமணத்தின் போது அபிஷேக் பச்சன் அணிவித்த மோதிரம் ஐஸ்வர்யா ராயின் விரலில் இல்லை. 

சமீபத்தில் நடந்து முடிந்த அம்பானி மகன் திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் தனியாக வந்திருந்தார். இதனால் அவர்கள் விவாகரத்து கிட்டத்தட்ட உண்மை தான் என்கிற அளவுக்கு பேசத் தொடங்கினர்.

தற்போது, இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யாவின் கைகளில் அந்த மோதிரம் இருந்திருக்கிறது. ஏற்கனவே அபிஷேக் பச்சனும் நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம் என கூறி இருந்தார்.

இதனால் விவாகரத்து எல்லாம் நடக்கவில்லை அது வதந்தி என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   
 

Leave a comment

Comment