TamilsGuide

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை-இடைநிறுத்தமா?

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், பரீட்சைகள் திணைக்களமும் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி விடைத்தாள் பரீட்சை திருத்தப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுவதற்கு முன்னர் வினாத்தாளைக் கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பகுதிநேர வகுப்பு ஆசிரியர்கள் சிலருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment