TamilsGuide

சாள்ஸ் நிர்மலநாதனை  மரியாதையின் நிமித்தம் சந்தித்த ஜனாதிபதி

மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக   வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மரியாதையின் நிமித்தம் இன்றைய தினம் (17)  மதியம் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார்.

இதன் போது மன்னார் தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க விற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதே நேரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் இளைஞர் அணி மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வருகை தந்த பொது மக்களுடன் சாள்ஸ் நிர்மலநாதனின் வீட்டில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ்நிர்மலநாதனிடம் வினவிய நிலையில் இது ஒரு மரியாதையின் நிமித்தமான சந்திப்பு எனவும் ஜனாதிபதி தேர்தலில் ஒட்டுமொத்த மன்னார் மக்கள் மற்றும் ஆதரவாளர்களின் முடிவே எனது முடிவு எனவும் மக்கள் யார் பக்கமோ அவர்களின் பக்கமே நான் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment