TamilsGuide

தலைக்கவசம் திருடப்பட்டதால் ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டம்

அனுராதபுரம் ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள் குழுவொன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

ரயில் நிலையத்திற்கு சொந்தமான வாகன தரிப்பிடத்தில் ரயில்வே கட்டுப்பாட்டாளரின் மோட்டார் சைக்கிளில் இருந்த பாதுகாப்பு தலைக்கவசம் அடையாளம் தெரியாத நபரால் திருடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில் நிலையத்தில் உரிய பாதுகாப்பு இல்லாதமையே  இத்திருட்டுச் சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரிவித்து ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள் குழுவினரால்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக அனுராதபுரத்திலிருந்து கிளிநொச்சி வரையான பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment