TamilsGuide

சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை

கொழும்பு, செட்டியார் தெருவின் தகவல்களுக்கு அமைவாக கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்று (18) அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,09,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,92,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (13) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 206,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 189,500 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

இதேவ‍ேளை, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,567.34 அமெரிக்க டொலர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment