TamilsGuide

யாழில். தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பெருமளவில் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  குழுக் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுடன் நேற்று  யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ”அலுவலர்கள் அனைவரும் தேர்தல் பணியாளர்கள் என்ற ரீதியில் பாகுபாடின்றி ஒருமித்து ஒருங்கிணைந்து சிறப்பாகச் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் வாக்கெண்ணும் நிலையமாகச் செயற்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் குழுக்களின் செயற்பாட்டில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களது சிறப்பான தொடர்பாடல் திறன் மூலம் வினைத்திறனாகச் செயற்பட்டுத் தேர்தல் கடமைகளுக்காக இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் நலன்களைப் பேணிச் சிறப்பான செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் மாவட்டச் செயலாளர் இதன்போது  வலியுறுத்தினார்.
 

Leave a comment

Comment