TamilsGuide

நாடளாவிய ரீதியில் 673 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 673 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 668 ஆண்களும் 05 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 17 பேர் பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment