TamilsGuide

யாழில் ரணிலுக்கு  ஆதரவாக அணி திரண்ட மக்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட   மாபெரும் பிரசார கூட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் பிளையாட்டு மைதானத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில்  குறித்த பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

யாழ் மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் அணிதிரண்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலை வலுப்படுத்தும் வகையில் தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
 

Leave a comment

Comment