TamilsGuide

எல்பிட்டிய தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் விசேட அறிவித்தல்

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவிடக்கூடிய அனுமதிக்கப்பட்ட தொகை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

காலி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 

Leave a comment

Comment