TamilsGuide

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 6 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று ஏற்பட்ட பேருந்து விபத்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 24 பேர் காயமடைந்துள்ளனர்.

சோப் மாவட்டத்தின் தனா சர் பகுதியில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் இருந்து மாகாண தலைநகர் குவெட்டாவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. சாலையின் வளைவில் பேருந்து திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Leave a comment

Comment