TamilsGuide

நாளை வாக்குச்சீட்டுகள் விநியோகம் இல்லை – தபால் திணைக்களம்

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் 84 வீதமானவை ஏற்கனவே வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாளையதினம் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் விநியோகம் செய்யப்படாது என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உத்தியோகபூர்வ வாக்குப்பதிவுகள் எதிர்வரும் 18ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்காவிட்டால், தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை சரிபார்த்து வாக்குச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment