TamilsGuide

சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட மருந்துகளுடன் இந்தியப் பிரஜை கைது

சட்டவிரோதமான முறையில் புற்று நோய் தடுப்பு மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரில் இருந்து நாட்டிற்கு வந்த போது இவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மருந்துப் பொருட்கள் சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தவை ஆகும்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Comment