TamilsGuide

பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அறிவிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்வரும் 18ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கத்  தீர்மானித்துள்ளனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கூட்டத்தில் இந்தத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகதபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடளாவிய ரீதியாகவுள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் இன்று கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment