TamilsGuide

சஜித் பிரேமதாசவிற்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் சந்திப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் உறுதியளித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கொழும்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முறையாக நியமிக்கப்பட்ட நீதித்துறை நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அங்கு மேலும் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment