TamilsGuide

நாட்டிற்கான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது

தாம் எப்போதும் கொள்கை ரீதியான அரசியலையே செயற்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  கிழக்கு மக்களுக்கு வாழும் உரிமையை வழங்கியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  என்பதை மக்கள் அறிவார்கள். அந்தவகையில் நாட்டின் அபிவிருத்திக்கான சரியான வேலைத்திட்டத்தை தமது கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

எமது  ஆட்சியில் அனைத்து கலாச்சாரங்களையும் பாதுகாத்து, இளைஞர்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்க தேவையான கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் ” இவ்வாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment