TamilsGuide

அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை

“அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால்,  அந்த 5 நாட்களுக்குப் பின்னர் வரும் முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்” என பொது சேவைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் அறிவிக்காமல் சேவைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் சில சந்தர்ப்பங்களில் சேவையில் இருந்து விலகுவதாக அறிவித்தல் வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகின்றது எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே  அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு  பொதுச்சேவை ஆணைக்குழு குறித்த சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
 

Leave a comment

Comment