TamilsGuide

மகிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு ஜேவிபி சதி திட்டம்- திஸ்ஸ குட்டியாராச்சி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைக்  கொலை செய்வதற்கு சதி திட்டங்கள் தீட்டப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நேற்று  இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே திஸ்ஸ குட்டியாராச்சி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ தேசிய மக்கள் சக்தியினால்
இந்த கொலைக்கான சதி முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும்

அவரது பாதுகாப்பு என்பனவற்றை இல்லாமல் செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்த சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்க ஜேவிபி தாயாராகி வருகின்றது. இந்த சதித் திட்டத்தின் உண்மை நிலையை அம்பலப்படுத்துமாறு நான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக புலனாய்வு பிரிவும் அறிவுறுத்தியுள்ளது.

ஆகவே அவர்களது பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்புக்கு வலியுறுத்தியுள்ளோம்” இவ்வாறு திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment