TamilsGuide

சுத்துப்போட்ட ரசிகர்கள் - கூலாக செல்ஃபி எடுத்துக் கொண்ட சூர்யா

சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது. ஊட்டியில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. இன்று படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட சூர்யாவை ரசிகர்கள் சூர்யாவை சூழ்ந்துக் கொண்டனர். அப்பொழுது சூர்யா அவர்களிடம் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் சிறப்பாக ஓடிய ஆர்.டி.எக்ஸ் திரைப்படத்தின் இயக்குனரான நஹாஸ் சூர்யாவை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

சூர்யா தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. நவம்பர் மாதம் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

Leave a comment

Comment