TamilsGuide

ஒட்டுண்ணிகள் மூலம் மனித மூளையைப் பாதிக்கும் புதிய வைரஸ்

சீனாவில் ஒட்டுண்ணிகள் மூலம் மனித மூளையைப் பாதிக்கும் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒட்டுண்ணிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் இந்த வைரஸ் 'வெட்லேண்ட் வைரஸ்' என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் உள்ள ஈரநிலப் பூங்காவில் பணிபுரிந்த 61 வயது முதியவர் ஒருவரிடம் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு மனித மூளை தொடர்பான கடுமையான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment