TamilsGuide

மகளின் தலையில் கேமரா மாட்டி 24 மணி நேரமும் கண்காணிக்கும் தந்தை.. 

பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் கேமராவை பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கும் தந்தையின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் செயல் குறித்து செய்தியாளருக்கு தலையில் கேமராவுடன் அந்த பெண் பேட்டி அளித்த வீடியோ இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், தனது பாதுகாப்புக்காகத் தந்தை தனது தலையில் செக்யூரிட்டி கேமராவை பொறுதியுள்ளார் என்றும் இந்த கேமராவுக்கான அக்ஸஸுடன் வீட்டில் இருந்தபடியே அவர் தான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை கண்காணித்து வருகிறார் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இது உங்களுக்கு அசவுகரியமாக இல்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த இளம்பெண், எனது தந்தையின் முடிவுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.அவர் எது செய்தலும் எனது நல்லதற்கு தான் செய்வார் என்று தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment