TamilsGuide

அதிகரித்து வரும் தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2863 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 209 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணைக்கழு தெரிவித்துள்ளது.

இதுவரையில் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 2113 முறைப்பாடுள் தொடர்பில் தீர்வு கண்டுள்ளதாகவும், எஞ்சிய 750 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்படத்தக்கது.
 

Leave a comment

Comment