TamilsGuide

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை வண்ணாத்தியாறு பகுதியின் காட்டுப் பகுதியில் இயற்கை வளங்களை அழித்து சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறும் இடமொன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியிலிருந்து மணல் சட்டவிரோதமான முறையில் இரவு வேளைகளில் வெளி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகக்  கிடைத்த தகவல்களுக்கு அமைவாகயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 15 க்யூப்பிற்கும் அதிகமான மணல் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment