TamilsGuide

யுத்த காலத்தில் கூட இது போன்ற நெருக்கடியைக் கண்டிருக்கவில்லை

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடியை யுத்த காலத்தில்கூடக் கண்டிருக்கவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மத்துகம தனியார் பேருந்து நிலையத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய  போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடியை யுத்த காலத்தில்கூடக் கண்டிருக்கவில்லை. அந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்தபோது எதிர்க்கட்சி தலைவர்கள், அதற்கும் ஆதரவளிக்கவில்லை.

ஆனாலும் நெருக்கடிகளைத் தீர்த்து சுமூகமான நிலையை ஏற்படுத்தும் இயலுமையும் அனுபவமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இருந்தது. அதனாலேயே அவரிடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க நாங்கள் தீர்மானித்திருந்தோம்” இவ்வாறு தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment