TamilsGuide

நமக்காக நாம் - திருகோணமலையில் அரியநேத்திரனின் பிரசாரம்

நமக்காக நாம் என்ற தொனிப் பொருளிலான பிரசாரம், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனால் திருகோணமலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை சிவன் கோவில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளுடன் கலந்து கொண்ட பின்னர் பிரசார நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார்.

இதேவேளை இலங்கை தமிழ் அரசு கட்சியியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் தமக்கான பெரும்பான்மை ஆதரவினை வழங்கியிருப்பதாக அவர் மகிழ்ச்சி வெளியிட்டிருந்தார்.

மேலும் நாட்டின் பதவியேற்கவுள்ள 9வது ஜனாதிபதி இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான ஓர் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்றும் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் வலியுறுத்தியிருந்தார்.
 

Leave a comment

Comment