TamilsGuide

தேசபந்து தென்னகோன்னின் மனு தொடர்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதைத் தடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால மனுவை எதிர்வரும் 13 ஆம் திகதி அழைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த இடைக்கால மனு இன்று யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை கலாநிதி பெல்லன்வில தம்மரதன தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்களினால் இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment