TamilsGuide

நான் ஜனாதிபதியானால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன்

”வடக்கு – கிழக்கு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைக்கு பதில் வழங்க தான் தயாராக இருப்பதாக” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு நிச்சயமாக ஒரு பதில் வழங்கியாக வேண்டும். தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த ஆணைக்குழுக்களை நியமித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

இதற்கு பதில் வழங்க வேண்டும். அந்த பதிலை வழங்குவதற்க நான் தயாராக இருக்கின்றேன். நான் ஜனாதிபதியாகியதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன்” இவ்வாறு  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment