TamilsGuide

உணவு விஷமானதால் 43 பேர் வைத்தியசாலையில் அனுமதி

உணவு விஷமானதால் தனியார் நிறுவன ஊழியர்கள் 43 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுக்க வட்டரக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 20-40 வயதுக்கு இடைப்பட்ட  25 பெண்களும் 18 ஆண்களும் அடங்குவதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment