TamilsGuide

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத் தீர்த்தத் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

காலை ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

இன்றைய தீர்த்த திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும்  வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர் .

இன்றைய தினம், மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளதுடன் நாளை செவ்வாய்க்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment