TamilsGuide

பம்பாய் பட வாய்ப்பை இழந்ததை நினைத்து 2 மாதங்கள் அழுதேன்- விக்ரம்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, நாசர் உள்ளிட்டோர் நடித்த பாம்பே படம் கடந்த 1995-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் தேர்வானாவர் நடிகர் விக்ரம்தான். படப்பிடிப்பில் கலந்து கொண்டு சில காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் அவர் நடித்து வந்த விக்ரமனின் புதிய மன்னர்கள் படத்திற்காக தாடி வளர்த்திருந்திருக்கிறார் விக்ரம். மணிரத்னமோ தாடியையும், மீசையையும் ஷேவ் செய்யச் சொன்னாராம். அது மட்டும் முடியாது சார் என்று கூறி படத்தில் இருந்து விலகிவிட்டாராம் விக்ரம்.

இறுதியில் அந்த கதாபாத்திரம் அரவிந்த்சாமிக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மணி சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது. அந்த படத்தை இழந்த பிறகு 2 மாதங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் படத்தை இழந்ததை நினைத்து அழுவேன். அதன்பிறகு மணிரத்தினம் சார் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று சபதம் போட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

முதலில் பம்பாய் படத்தில் நடிக்க முடியாமல் போனாலும், மணிரத்னத்துடன் பணிபுரியும் விக்ரமின் கனவு இறுதியில் நனவாகியது. அவர் மணிரத்னம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான ராவணன் திரைப்படத்தில் ராவணனாக நடித்தார். பொன்னியின் செல்வன்: I மற்றும் II-ல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
 

Leave a comment

Comment