TamilsGuide

மட்டுப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டு விநியோகம் – மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பு

கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக பொதுமக்கள் இன்றும் நீண்டவரிசையில் காத்திருந்தனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் நேரம் திகதி முன்பதிவு செய்து கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது நாளாந்தம் 750 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்டளவில் வெற்றுக் கடவுச்சீட்டு அட்டைகள் இருப்பு காணப்படுவதனாலேயே கடவுச்சீட்டு விநியோகத்தினை வரையறுக்க நேரிட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும் இன்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக இவ்வாறான ஒருநிலைமை காணப்பட்டது.
 

Leave a comment

Comment