TamilsGuide

சஜித்தின் ஆட்சியில் பெண்களுக்கு என விசேட திட்டம்-ஹிருணிகா

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் நாட்டின் பொருளாதாரத்தில் எழுச்சி ஏற்படும் என தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, சஜித்தின் ஆட்சியில் பெண்களுக்கு என விசேட திட்டம் ஒன்றும் வகுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்யும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

இதன்போது புத்தளம் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்

அதன்படி வரும் ஜனாதிபதித் தேர்தலில் புத்தளம் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயமாக வெற்றி பெரும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், புத்தளத்தில் ஒரு இலட்சத்திற்கு மேல் வாக்குகளை எமது கட்சி பெற வேண்டும். புத்தளம் தான் முழு மாவட்டத்தையும் வெற்றி பெறச் செய்யும் தொகுதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்
 

Leave a comment

Comment