TamilsGuide

சஜித் அணியிலிருந்து வெளியேறும் இராதா – உதயா? – வேலுகுமார் கருத்து

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன், உதயகுமார் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளமை தொடர்பிலான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இராதாகிருஷ்ணன், உதயகுமார் ஆகிய இருவரும், எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி தங்களுடைய ஆதரவைத் தெரிவிப்பதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரத்து 700 ரூபாய் சம்பளம் சாத்தியமாகி இருக்கும் நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி அந்த கொடுப்பனவு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
 

Leave a comment

Comment