TamilsGuide

யோர்க் பிராந்தியத்தில் வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு

கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்த ஆண்டில் இதுவரையில் கார் கொள்ளைச் சம்பவங்கள் பாரிய அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஐந்தாண்டு காலப் பகுதியில் யோர்க் பிராந்தியத்தில் வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் 400 வீதமாக உயர்வடைந்துள்ளது.

இந்த ஆண்டில் யோர்க் பிராந்தியத்தில் 64 வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இது 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யப்படும் போது 106 வீத வளர்ச்சியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

யோர்க் பிராந்தியத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் 92 வீதத்தினால் அதிகரித்தள்ளது. 
 

Leave a comment

Comment