TamilsGuide

இது உங்களுக்கான தீனி - மீடியாக்களை சாடிய சுரேஷ் கோபி

2017-ம் ஆண்டு நடிகை தாக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் கேரள மாநில அரசு ஒரு குழு அமைத்தது. இந்த குழு சமர்பித்த அறிக்கை மலையாளம் சினிமா துறையில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை வெளிப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து பெரும்பாலான நடிகைகள் தாங்களும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக நடிகர்கள், டைரக்டர்களுக்கு எதிராக அடுத்தடுத்து புகார் தெரிவித்து வரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாலையான சீனிமாவின் மூத்த நடிகரும், மத்திய தலைவருமான சுரேஷ் கோபியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:-

நான் புரிந்து கொண்டது வகையில் இது எல்லாம் உங்களுக்கான தீனி மாதிரி. இதை பயன்படுத்தி உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த பிரச்சனைகள் நீதிமன்றத்தின் முன் உள்ளன.

நீங்கள் (ஊடகங்கள்) உங்களுடைய சொந்த ஆதாயங்களுக்காக மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிட வைப்பது மட்டுமல்லாமல், சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையையும் தவறாக வழி நடத்துகிறீர்கள்.

புகார்கள் தற்போது குற்றச்சாட்டு வடிவில் உள்ளன. நீங்கள் மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் நீதிமன்றமா? நீதிமன்றம் முடிவு செய்யும். நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.

இவ்வாறு சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment