TamilsGuide

கனடாவில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய நபர் பிரிட்டனில் கைது


கனடாவில் இடம் பெற்ற படுகொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 22 ஆம் திகதி ரொறன்ரோவின் இசபெல்லா மற்றும் ஜார்விஸ் வீதிகளுக்கு அருகாமையில் இடம் பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றிருந்தது.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது நபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் காணப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காயமடைந்த நபரை மீட்டு அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் படுகாயங்கள் காரணமாக குறித்த நபர் வைத்தியசாலையில் நான்கு நாள் சிகிச்சை பெற்று உயிர் இழந்திருந்தார்.

மிசசாகவைச் சேர்ந்த 30 வயதான ஜெஸ்ஸி டாப்ஸ் என்ற நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் 24 வயதான ஏட்ரியன் கோர்டன் என்ற நபரை பொலிஸார் தேடி வந்தனர்.

இவருக்கு எதிராக கனடா தழுவிய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறு எனினும் குறித்த சந்தேக நபர் இங்கிலாந்தின் ஹியுட்டன் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் விரைவில் கனடாவிற்கு நாடு கடத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a comment

Comment