TamilsGuide

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு இன்று எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தேர்தல் அதிகாரியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்குப்பதிவுக்கான வைப்புத்தொகையை ஏற்கும் நடவடிக்கை இன்று முதல் செப்டம்பர் 11-ம் திகதி நண்பகல் 12 மணி வரையும் மற்றும் இந்த காலகட்டத்தில் செப்டம்பர் 1, 7 மற்றும் 8, 2024 தவிர வேட்புமனுக்கள் செப்டம்பர் 9 முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் செப்டம்பர் 12 திகதி மதியம் 12 மணி வரை காலி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் .சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்
 

Leave a comment

Comment