TamilsGuide

வரி தொடர்பான தகவல்கள் இன்று வெளியிடப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

வரி தொடர்பான அனைத்து தகவல்களும் இன்று வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச வருமானத்தை அதிகரிக்கச் செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வரி நிலுவையை வசூலிப்பதற்காகச் சுமார் 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதற்கமைய, இன்று முதல் வரி தொடர்பான அனைத்து தகவல்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment