TamilsGuide

கத்தோலிக்க திருச்சபை ஆயர்களை சந்தித்தார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேரா உள்ளிட்ட குழுவினரை இன்றைய தினம்  சந்தித்து கலந்தரையாடியுள்ளார்

குறித்த  சந்திப்பின் போது, கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேரா, பொதுச் செயலாளர் டொன் அன்டன் ஜெயக்கொடி, கொழும்பு உதவி ஆயர் மற்றும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் குருமார்களை  சந்தித்து நாட்டில் தற்போது நடைபெற்று வரும் கல்வி சீர்திருத்தங்கள், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள், சுற்றுச்சூழல் மற்றும் மத விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சந்திப்பில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவு சவால்களுக்கு ஈடுகொடுப்தற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment