TamilsGuide

தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

படத்தின் முதல் பாடலுக்கான ஃபைனல் மிக்சிங் முடிவடைந்தது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என ஜி.வி பிரகாஷ் குமார் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக தற்பொழுது படக்குழு அறிவித்துள்ளது.

இப்பாடலிற்கு கோல்டன் ஸ்பேர்ரோ என்ற தலைப்பு வைத்துள்ளனர். பாடல் விரைவில் வரப்போவதாக போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் முன்ன்ணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர், இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

இப்பாடலுக்கும், இப்படத்துக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. திரைப்படம் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment